7/24/2008

குளத்தங்கரையில் குந்துகாலிட்டு யோசிப்பாய்ங்களோ!!!

(அடுத்தவர் வலை தளத்தில் வந்தது,வாசகர்களுக்காக)

தற்செயலாக நடப்பவை. நம்பினால் நம்புங்கள்.

1) 1978 இல் கமல் சைக்கோ கொலைக்காரன் வேடத்தில் நடித்த “சிகப்பு ரோஜாக்கள்” வெளிவந்தது. ஒரு வருடத்திற்கு பிறகு, சைக்கோ ராமன் என்பவன் கொடுரமாக கொலை செய்ததற்க்காக கைது செய்யப்பட்டான்.
2) 1988 இல் வேலை இல்லா இளைஞனாக “சத்யா” படத்தில் நடித்தார். 89-90 காலக்கட்டத்தில், இந்தியா வேலை இல்லா திண்டாட்டத்தால் பெரும் அவதியை சந்தித்தது.
3) 1992 இல், அவரின் வெற்றிப்படமான “தேவர் மகன்” வெளிவந்தது. சரியாக ஒரு வருடம் கழித்து, 1993 இல், தென்மாவட்டங்களில், சாதி கலவரம் ஏற்பட்டது.
4) 1994 இல் வெளிவந்த “மகாநதி” படத்தில் ஏமாற்றிக்கொண்டு ஒடும் சீட்டு கம்பெனியை காட்டியிருந்தார். 1996 இல், பல கம்பெனிகள் ஒடியது.
5) ஹேராமில் (2000) இந்து-முஸ்லிம் சண்டை பிண்ணனி. இரண்டு வருடம் கழித்து, கோத்ரா.
6) 2003 இல் வெளிவந்த “அன்பே சிவ”த்தில், ஒரு இடத்தில் சுனாமி என்று சொல்லியிருந்தார். அதுவரை, அறிந்திராத சுனாமி, 2004 இல், ஒரு காட்டு காட்டியது.
7) வேட்டையாடு-விளையாடுவில் (2006) இரு சீரியல் சைக்கோ கொலைகாரக் கதாபாத்திரங்கள் (இளா-அமுதன்) இருந்தன. மூன்று மாதத்திற்கு பிறகு, நொய்டா கொலைகள் (மொநிந்தர்-சதீஷ்) வெளிச்சத்திற்கு வந்தது.

இப்ப 2008 – தசாவதாரம். அப்புறம்?

No comments:

About Me