Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

1/06/2012

புன்னகை!

புன்னகை
முகத்துக்கு ஒளிவிளக்கு!

புன்னகை
சமாதானப் புறா!

புன்னகை
மெளனத்தின் தவம்!

புன்னகை
சலன மனதிற்கு ஒரு கடிவாளம்!

புன்னகை
பறிகாசத்தை மங்கச் செய்யும் பிரகாசம்!

புன்னகை
எதிரியையும் நம் பக்கம் திருப்பும் காந்தம்!

புன்னகை
சினத்தைச் சிறைப்படுத்தும் ஆயுதம்.

புன்னகை
அமைதியின் நிழல்!

புன்னகை
மணம் வீசும் பூந்தோட்டம்!

புன்னகை
மனதை பறிக்கும் மலர்!

புன்னகை
கருணையின் கண்ணாடி!

உதட்டு ஒப்பனை பூச்சைவிட
புன்னகைசிந்தும் மந்தகாசம்
அட்டகாசமான மந்திரம்!
அது செய்யும் தந்திரம்

திறம்!
வரம்!
வாழ்க்கைக்கு உரம்!

- CROWN
---------------------
நன்றி: அதிரை நிருபர்.

4/07/2011

விடாதே பிடி

தலைநோன்பு பிடித்தவொரு
கலையாத நினைவு ...
பின்னிரவில் விழித்து
பிடித்துவிடத் தயாராகி
உண்டு காத்திருந்தும்
உறங்கும்வரை வருமென்ற
உருவநோன்பு வரவேயில்லை!



மண்பானைத் தண்ணீரும்
முதல்நாள் தலைநோன்பும்
ஒன்றுக்கொன்று ஒவ்வா
ஒத்துவராத் தேட்டங்கள்!

வீம்பு பிடித்தேனும்
நோன்பு பிடித்தோம்
அன்னை தடுத்தார்
சொன்னதைக் கேளோம்!

சஹரில் விழித்து பின்
லுஹரில்தான் விழித்தோம்
இடைப்பட்ட நேரம்வரை
பசிதாகம் பொறுத்தோம்!

உச்சி வெயில்வேளை
ஊருணியில் குளித்தோம்
குளித்த தண்ணீரைக்
குடல்முட்டக் குடித்தோம்

அச்சுவெல்லப் பாச்சோறும்
பச்சரிசிப் பிடிமாவும்
இளநீரின் வழுக்கையும்
இறால் பதித்த வாடாவும்
நோன்புக் கஞ்சி மல்லாவும்
நன்னாரி சர்பத்தும்
முன்னாலே இருக்கும்
தலைநோன்பு திறக்கவென!

படைத்தவன் பெரியவன்
எனும் பாங்கின்
அழைப்போசை கேட்குமுன்
அமுதமாய்க் காதில்விழும்
அடிக்கும் நகராவோசை!

மஃரிபுக்குப் பிறகு அரை
மயக்கத்திலே கிடக்கையில்
மண்டைக்குள்ளே கேள்வி
நோன்பு
பிடித்தேனா விட்டேனா?!


- சபீர்

About Me